அதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவிப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித்தா தனக்கு பின் அதிமுக நிலைக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெ.தீபா தெரிவித்தார். மேலும் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அரசியல் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை மீட்ப்பதில், சட்ட ரீதியிலான நடவடிக்கை தொடரும் என உறுதிப்பட தெரிவித்தார்.
அதிமுகவுடன் இணைகிறது- ஜெ.தீபா பேரவை!
Advertisment