Skip to main content

உழைப்பிற்கு கிடைத்த ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பதவி... பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

J Council District Secretary post! Former Minister Natham Viswanathan recommended !!

 

திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துவருபவர் யூசுப் அன்சாரி. இவரின் தாத்தா ரஹீம், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். இவரது தந்தை அஜீஸ், திமுக தொழிற்சங்க பிரமுகராக இருந்துள்ளார். இப்படி அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்துவந்தவர்தான் யூசுப் அன்சாரி. 

 

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியது பாமகவில் மாவட்ட தலைவராக சில காலம் பணியாற்றி வரும்போதுதான் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். அதன்பின் கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பாமகவில் இருந்து விலகி இருந்த அன்சாரி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை கண்டு அதிமுகவில் ஐக்கியமாகி உறுப்பினராக சேர்ந்தார். 

 

அப்போது  முப்பெருந்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டவராய் அவரது தலைமையில் தொடர்ந்து கட்சிப்பணி செய்துவந்தார். இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனாவின் கோராத் தாண்டவத்தால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவிற்கே அல்லல்பட்டு வந்தபோது அன்சாரி, தான் பணிபுரியும் நிறுவனத்தின் உதவியுடன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தனது முயற்சியில் சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு, மளிகைப்பொருட்கள் என அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். இவரின் இந்த தாராள குணமும், ஏழை மக்களின் துயர் துடைக்கும் உள்ளமும் பொதுமக்கள் மத்தியில் மேலும் நல்ல பெயரை இவருக்கு பெற்றுத்தந்தது.

 

இந்நிலையில்தான் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதில் முன்னாள் முப்பெரும்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை ஒ.பன்னீர்செல்வமும் முதல்வர் பழனிசாமியும்  வழங்கினார்கள். அதை தொடர்ந்துதான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றிய பெருந்தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவருமான கண்ணனோ அன்சாரியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் எடுத்துக்கூறினார். அதைதொடர்ந்து நத்தம் விஸ்வநாதனும் தலைமைக்கு பரிந்துரை செய்து, யூசுப் அன்சாரிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பதவிகொடுக்க வழிவகுத்தார். அதன் பேரில் தலைமையும்  யூசுப் அன்சாரியை  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளராக நியமித்தது. 

 

அதை கண்டு பூரித்துப்போன யூசுப் அன்சாரி உடனே முன்னாள் முப்பெரும்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். நத்தம் ஒன்றிய பெருந்தலைவரும் விஸ்வநாதனையும் கண்ணனையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள  நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று  கட்சி வளர்ச்சிக்காக ஜெ பேரவைக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் களம் இறங்கி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.