சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கடந்த 10.06.2019 அன்று உயிரிழந்தார்.
அவருக்கு சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பாக நேற்று படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும்,நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.