கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இதற்கு முன்னதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் ரீலாவிடம் தமிழக முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.