publive-image

Advertisment

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி அனுபவத்தை கொடுப்பது மழை. அதுவும் 90ஸ் கிட்ஸ் சிறுவர்கள் தங்களது பள்ளிப் பருவங்களில் பள்ளிக்கு செல்லும் பொழுது திடீரெனபெய்யும் மழையைஎதிர்கொள்வதே தனி சுவாரசியம். ஒரு நாள், இரு நாள் மழை விடுமுறைக்காக ஏங்கித் தவித்து தருணங்களும் உண்டு. அப்படி இருக்க அதனை ஒட்டுமொத்தமாக மறுபடியும் நினைவுபடுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் வெளியான ஒரு வீடியோ90ஸ் கிட்ஸ்களைஅசைபோட வைத்திருக்கிறது.

அதில், ஒரு அழகியகிராமத்தின் சாலையில் பள்ளிச் சிறுவர்கள் நடந்து கொண்டிருக்கையில் மழை பெய்ததால் உடனடியாக கையில் இருந்த ஒற்றை குடையை விரித்து சிறுவர்கள் ஆறு பேரும் ஒரே குடையில் பயணிக்கின்றனர். அதில் ''மழை வருது குடைக்குள்ள வா...'' என புன்னகை மாறாது மழையை ரசித்தபடி வெற்றுக்கால்களுடன் சிறுவர்கள் நடந்து செல்லும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனீஸ்சரண் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், இந்த காட்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.