Skip to main content

"நீங்க பிச்சையா போட்டது இன்னிக்கு வளர்ந்து மலையா நிக்குது” - சீமான் கட்சி மேடையில் கொதித்த பிரசாந்த்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

நாம் தமிழர் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். மீனவ பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர். அது மட்டுமில்லாமல் இவர் ஒரு பி.காம் பட்டதாரி ஆவார். இத்தகைய எளிமையான பின்னணியை கொண்ட ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தியதன் மூல நாம் தமிழர் கட்சிக்கு நற்பெயர் பெற்றிருக்கிறது. 
 

its prashanth

 

இந்நிலையில், இந்த வேட்பாளரை ஆதரித்து திடீரென மேடையேறினார் பிரபல யூ-ட்யூப் ரிவியூவர் இட்ஸ் பிரசாந்த். அவர் பேசுகையில், “ மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய தொகுதிகள் முக்கியமான தொகுதிகள். அந்த தொகுதிகள் எந்த மாதிரியான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று பார்க்கும்போது தொகுதிக்கும் வேட்பாளருக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தனர். இப்போது வடசென்னை என்று எடுத்துகொண்டால் மினிமம் உப்பு காற்று எப்படி இருக்கும், கப்பல் எப்படி இருக்கும், நண்டு எப்படி இருக்கும், இறால் எப்படி இருக்கும் என்றாவது தெரிய வேண்டும். ஆனால், சில வேட்பாளர்களை பார்க்கும்போது அவர்களெல்லாம் லண்டனில் வாழ்ந்தார்களா? சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார்களா என்று தெரியவில்லை. நான்தான் வடசென்னை வேட்பாளர் என்று அவர்களெல்லாம் சொல்லிக்கொண்டு, எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட்டால் நம்மை கண்டிப்பாக போடுவார்கள். அந்த பிளானோடுதான் வந்திருக்கிறார்கள். இப்படி பல வேட்பாளர்கள் இருக்கையில் பக்கத்து வீட்டு பெண்ணை போல சேலை கட்டிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் இருந்தார். அவரிடம் ஒரு நேர்காணலில் மீனவர்களுக்கு முக்கிய பிரச்சனை என்ன என்று கேட்டபோது. நான் மீனவக்குடியை சேர்ந்தவள், அனைவரும் பிழைப்புக்கு கடலுக்குள் போய்விட்டு திரும்பி வரும்போது சொந்தமாக அவர்களுக்கு என வீடு இல்லை. அப்படி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் வீடுகள் மிக தொலைவில் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு வேலைக்கு செல்ல மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது என்று அந்த வேட்பாளர் சொன்னார். அப்போதுதான் ஒன்று தெரிந்தது நாம் தமிழர் மேடையில் விஷயம் தெரியாமல் பேசினால் வைத்து செய்துவிடுவார்கள் என்று. நல்ல அறிவார்ந்த ஒரு கட்சியாக இது இருக்கிறது. 
 

இப்போது போலீஸ்காரர்களை கூட பயமில்லாமல் பேசிவிடுகிறோம். ஆனால், அரசியல்வாதியை பார்த்து நேராக கேட்க பயப்படுகிறோம். ஐம்பது வருடம் நீங்கள் பிச்சையாய் போட்டது, அவர்களிடம் மலையாய் வளர்ந்து நிற்கிறது. அவ்வளவு திருடி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருக்க ஆயுதத்தை கொடுத்தது நீங்கள் எல்லாம்தான். அப்படி அவர்களிடமே அந்த ஆயுதத்தை கொடுத்துவிட்டு அந்த மலையை உடைக்க சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த மாதிரி கட்சிகளும், வேட்பாளர்களும் இல்லையென்றால் உடைப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். நூறு வருடம் இப்படியே இருந்து குட்டிச்சுவராகிவிடும். இறுதியில் வடசென்னை என்ற இடத்தில் சீனாக்காரன் ஒருவன் கேட் போட்டு உட்கார்ந்துகொண்டு நாம் உள்ளே போவதற்கு அவனிடம் அனுமதி வாங்கவேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.
 

கடல்கரைக்கு அருகே இருப்பவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் கிடையாது, தனித்துவிடப்பட்டவர்கள் கிடையாது இந்த மண்ணின் மைந்தன் பூர்வக்குடி அவர்கள்தான். நான்தான் கோயம்பத்தூரிலிருந்து வந்து உங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த தகுதியே இல்லை. நூறு, நூற்றைம்பது வருடங்களாக கடலில் மீன் பிடித்து உழைத்தே இருந்ததனால் அவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கவேண்டும் என்று தெரியவில்லை பாவம், அதனால் இந்த சமூகம் அவர்களை ஒதுக்கி ஓரம்கட்டிவிட்டது. அதை மாற்ற காளியம்மாள் மாதிரியானவர்கள்தான் முதல் வித்தாக இருப்பார்கள்” என்று கூறினார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்