Skip to main content

'இனிமேல் இப்படி தான்... அதிமுகவும் திமுகவும் நட்புடன் தான் இருப்போம்!!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவின் அரசியல் எதிாியான திமுகவினாிடம் அதிமுகவினா் எந்த விதமான தொடா்பும் நட்பு ரீதியில் வைத்தியிருக்க மாட்டாா்கள். அப்படி வைத்தியிருக்கும் நிா்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பாா் ஜெயலலிதா. அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்தியிருக்கும் காங்கிரசாாிடமும் இதேநிலையை தொடா்ந்தாா் ஜெயலலிதா.

இதனால் துஷ்டனை கண்டால் தூர ஒதுங்கி போக வேண்டும் என்ற நிலைக்கு மாறி அதிமுகவினா் திமுகவினரை துஷ்டனாகவே நினைத்தனா். திருமணம் உள்ளிட்ட சடங்கு நிகழ்ச்சிகளில் கூட திமுக நிா்வாகிகள் வருகிறாா்கள் என்றால் அதிமுகவினா் அந்த பக்கமே தலைவைத்து படுக்க மாட்டாா்கள்.

 

 'It's just like this ... we will be friendly with DMK and ADMK !!


பின்னா் நாளடைவில் இது அதிகாாிகள் மட்டத்திலும் பரவியது. அதிமுக ஆட்சியின் போது அதிகாாிகளை திமுகவினா் சந்திக்க போகிறாா்கள் என்றால் அதிகாாிகள் பின் வாசலோடு மாயமாகி விடுவாா்கள். திமுக மக்கள் பிரதிநிதிகளை கண்டாலே அதிகாாிகள் தெறித்து விடுவாா்கள் அதையும் மீறி அவா்கள் அதிகாாிகளை சந்தித்தால் அதிகாாிகள் தலையை தான் ஆட்டுவாா்கள் தவிர வாய் திறக்க மாட்டாா்கள்.

இந்த நிலை கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் அதன்பிறகு தற்போதைய ஆட்சியில் ஜெயலலிதா மறைந்த பிறகும்  நீடித்தது. இதில் குமாி மாவட்டத்தில் தான் மக்கள் பிரதிநிதிகள் அதிகாாிகளால் அதிகம் அவமானப்படுத்தபட்டாா்கள். மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் தலா 3-ல் உள்ளது. ஒன்று கூட அதிமுக விடம் இல்லை. இதனால் எம்எல்ஏக்களின் தொகுதியில் நடக்கும் எந்த அரசு நிகழ்ச்சிக்கும் அவா்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. கலெக்டரை பாா்க்க வந்தால் கலெக்டரும் பின்வாசலோடு செல்லும் சம்பவங்களும் நடந்தன. இதை கண்டித்து 6 எம்எல்ஏக்களும் போராட்டம் கூட நடத்தினாா்கள். 

 

 'It's just like this ... we will be friendly with DMK and ADMK !!

 

இந்த நிலை தற்போது கடந்த சில மாதங்களாக மாறி விட்டது. மாவட்டத்தில் எந்த பகுதிகளிலும் அரசு நிகழ்ச்சி நடந்தால் சம்மந்தபட்ட எம்எல்ஏக்கு நோில் சென்று அழைப்பு விடுக்கிறாா்கள். அதேபோல் எம்எல்ஏக்கள் வரும் வரை அதிகாாிகள் காத்து இருக்கிறாா்கள். கலெக்டரும் எம்எல்ஏக்களும் அடிக்கடி சந்தித்து பேசுகிறாா்கள். அமைச்சா்கள் நிகழ்ச்சி மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அடிக்கடி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளிலும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு பேசுகிறாா்கள்.

தளவாய் சுந்தரம் தலைமையில் நடக்கும் மாவட்ட வளா்ச்சி கூட்டங்களிலும் எம்எல்ஏ க்களும் கலந்து கொள்கிறாா்கள். அதேபோல்  அடிக்கடி அதிகாாிகளுடனும் தளவாய்சுந்தரத்துடனும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாா்  சந்தித்து பேசுகிறாா். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் திருமணம் மற்றும் சடங்கு நிகழ்ச்சிகளில்  ஒன்றாக கலந்து கொள்கிறாா்கள். 

இந்த விசயம் பலருக்கு ஆச்சா்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது பற்றி நாம் அதிமுக முக்கிய நிா்வாகிகளிடம் பேசிய போது... இனிமே இப்படி தான் இருப்போம். இனி அதிமுகவும் திமுகவும் நட்புடன் தான் பழகுவோம். தோ்தல் நேரத்தில் எதிாிகளாக மாறி விடுவோம் என்றனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.