Skip to main content

இருண்டது தமிழகம்!  தென் மாவட்ட நாடித்துடிப்பு!

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
n

 

தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கும் தமிழர்களுக்கும் உதிரமாயிருந்த உன்னதத் தலைவர் கலைஞர், விடை கொடுதாயே என்று பயணம் புறப்பட்டு விட்டார். தேசமே கதறுகிறது. தமிழகம் இருண்டு போய்க் கிடக்கிறது.

 

கடையை அடையுங்கள், பேருந்தை இயக்காதே. தொழிலை நிறுத்து என்ற ஆவேசக்குரலோடு எந்த ஒரு கரை வேட்டியோ மனிதரோ வரவில்லை. கலைஞர் காலமானார் என்ற தகவல் மின்னலாய் பாய்ந்த நேரத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடைகள் தானாகவே அடைபட்டன. பேருந்துகள் முடங்கின. பெட்டிக் கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பூட்டுக்கள் தொங்கின. இருபதாயிரம் விசைத் தறிகளைக் கொண்ட லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களிருக்கும் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவின் தொழில் நகரம் ஸ்தம்பித்தது.

 

p

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்ட துக்கத்தையே மக்களின் முகத்தில் காண முடிந்தது. அத்தனை இறுக்கம். மாவட்டங்களில் ஊசி முனை அளவு கூட அசம்பாவிதம் நடந்ததாகத் தகவலுமில்லை. அனைத்தும் இயல்பாகவே நடந்தது.

 கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கு. மறியல்.

 தென்மாவட்டமே ஒசையின்றி இருந்த கணத்தில் அந்த இரவில் பத்தரைமணி வாக்கில் நெல்லை மாவட்டத்தின் தென்காசி நகரில் தி.மு.க. ந.செ. சாதிர் தலைமையில் திரண்ட உடன்பிறப்புக்கள், ஐந்து முறை முதல்வராயிருந்தவர் அவரால் பலனடைந்த பிரிவினர் ஏராளம், அவருக்கு மெரினாவில் ஆறடி இடத்தை ஒதுக்குங்கள் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை நகர போலீசார் கைது செய்தார்கள்.

k

 கற்கும் மாணவனாய் உள்ளே செல்கிறேன்.

 1949ல் அண்ணா, கழகம் தொடங்கிய நேரத்தில் கலைஞரை தூத்துக்குடிக்கு அனுப்பி அங்கே கழகத்தைத் தொடங்கி வைக்கச் சொன்னார். கே.வி.கே. சாமியை மா.செ. பொறுப்பில் வைத்த கலைஞர் அங்கே கழகத்தைத் தொடங்கி வைத்தார். 1949 களிலிருந்தே திராவிட பாரம்பரியத்தில் ஊறி வந்த குடும்பமான தூத்துக்குடியின் தங்கராஜ் நாடார், கலைஞரின் மீதான ஈர்ப்பு காரணமாகக் கருவிலேயே தன் மகனுக்கு கருணாநிதி என்று பெயரிட்டார். மாப்பிள்ளை என்று சொல்லி ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் அது துள்ளுமாம். போலவே, பெயருக்கேற்றவாறு இலக்கியத்திலும், அரசியல் மேடைப் பேச்சிலும் கலக்கி வரும் கருணாநிதி, 67 முறை கலைஞரைச் சந்தித்துப் பேசியவர்.

1951ல் தேர்தலில் ஜெயித்த புதிய எம்.எல்.ஏ.க்கள். அப்போது தான் சட்டசபைக்குள் வந்து கொண்டிருந்தார்கள். அது சமயம் பத்திரிகையாளர்கள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எத்தகைய உணர்வுடன் சட்டசபைக்கு வருகிறீர்கள் என்று கேட்டதற்கு கன்னா, பின்னா வென்று தங்கள் மனதுக்கு எட்டியதைச் சொன்னர்கள்.

 

குளித்தலைத் தொகுதியிலிருந்து ஜெயித்து முதன் முதலாக எம்.எல்.ஏ.வாக வந்த கலைஞரிடமும் அதே கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைக்க,

கற்கும் மாணவனாய் உள்ளே செல்கிறேன். கற்பிக்கும் ஆசிரியராய் வெளியே வருவேன் என பிசிரில்லாமல், பற்ற வைத்த வெடி போன்ற பதிலாய் வந்ததைக் கேட்ட பத்திரிகையாளர்களின் புருவங்கள் உயர்ந்தன.

அ.தி.மு.க.வின் டாப் லெவல் பேச்சாளரான அந்த கருணாநிதி, தற்போது அ.தி.மு.க.விலிருந்தாலும், கலைஞரின் பிரிவு தாளாமல், இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிச் சொல்லிச் சொல்லிக் கதறுகிறார்.

 

தாள மாட்டாத மரணங்கள்

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகிலுள்ள பிச்சத்தலைவன் பட்டிக் கிராமத்தின் கோயில் பிள்ளை கலைஞரின் மீதான பற்றுதலால் தன் மகனுக்குக் கருணாநிதி என்று பெயர் சூட்டிய முதியவர். வயதான காலத்தில் கிராமத்தில் வைத்திருக்கும் பெட்டிக் கடை வருமானத்தில் அவரும் அவருடைய மனைவியும் வயிற்றைக் கழுவியவர்கள். டீக்குடிப்பதற்காக கிராமத்தின் கடைக்குப் போனவர், அங்குள்ள டி.வி.யில் கலைஞரின் உடல் நலத்தில் பின்னடைவு என ப்ளாஷ் ஒட, தாங்கமாட்டாமல் தன் மார்பைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தவரின் மூச்சு, அங்கேயே அடங்கியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம், கான்சரபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் தி.மு.க.வின் கி.க. செ. காவேரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கலைஞரின் உடல் நிலைக் குறைவைப் பொறுக்க மாட்டாமல் கவலையோடிருந்தவர், தாங்க முடியாத சோகத்தால் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தின் சுரண்டைப் பக்கமுள்ள, வீ.கே.புதூரைச் சேர்ந்த பிச்சையாவுக்கு 80 வயது. தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர். 1977ல் கலைஞர் அந்தக் கிராமத்தில் தி.மு.க.வின் கொடியை ஏற்றியபோது கொடிக்கம்பம் முறிந்து விழுந்ததில் பிச்சையாவின் இரண்டு விரல்கள் துண்டானது. சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு அவரைப் பார்த்து நலம் விசாரித்த கலைஞர் அவருக்கு ஐநூறு ரூபாய் நிதி உதவியும் செய்திருக்கிறார்.

காவேரி மருத்துவமனையில் கலைஞர் ஒரு வாரமாக தீவிர சிசிச்சைப் பிரிவிலிருந்த செய்தி பிச்சையாவை மிகவும் பாதித்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் மயக்க மடைந்த அவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள் ஆனாலும் கவலையில், அவரது உயிர் அங்கேயே பிரிந்திருக்கிறது.

கலைஞரின் பிரிவு, தமிழகத்தின் உயிர்த்துடிப்பையே அசைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.