'அது பக்தர்களின் விருப்பம்... '-தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

'It is the will of the devotees ...' - Case against Archana in Tamil dismissed!

அண்மையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்றதிட்டத்தைத்தமிழக அரசின் இந்து சமயஅறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்திவருகிறது. இது தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், ''1998 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும்என்று கூறப்பட்டுள்ளதுஎனவே கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை மாற்றக்கூடாது'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதானவிசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றதலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு மனுதாரரின் வாதத்தை ஏற்கமறுத்து, ''2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்எந்தமொழியில் அர்ச்சனை செய்யவேண்டும்என்பது பக்தர்களின் விருப்பத்திற்குஉட்பட்டது. குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்யவேண்டும்என வற்புறுத்தக் கூடாது. எனவே ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது''எனக்கூறிவழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

highcourt sri rangam temple TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe