Skip to main content

''கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு இருப்பது உண்மைதான்... ஆனால்...''-கே.எஸ்.அழகிரி பேட்டி!

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

 '' It is true that there has been a power outage for the last two weeks ... but ... '' - KS Alagiri interview!

 

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் கீரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீரப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது கிராம ஊராட்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கிராம சபை கூட்டத்தில் பேசிய கே.எஸ். அழகிரி

 

தமிழ்நாடு அரசு ஊராட்சிகள் விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார். அவரைப் போன்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமேயானால் கிராமத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரலாம்'' என்றார்.

 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு இருப்பது உண்மைதான். அதற்கான விளக்கத்தை முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய அனல் மின் நிலையங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து நிலக்கரி வருவது குறைந்து விட்டது. பாஜக அரசு இதை முறையாகச் செய்திருந்தால் தட்டுப்பாடு வராது. அதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.15 தினங்களுக்கு முன்பு கூட நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்தக் கவனம் செலுத்த வேண்டும் என ராகுல்காந்தி சொல்லி இருக்கிறார். மோடி அதைச் சட்டை செய்யவில்லை.

 

 '' It is true that there has been a power outage for the last two weeks ... but ... '' - KS Alagiri interview!

 

வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை மாநில அரசுகளே இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறார்கள். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. எரிவாயு, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி 250 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் இதை உயர்த்தியவர் மோடிதான். ஆனால் மாநில அரசு சிறிய அளவில் உயர்த்தினால் நீங்கள் தான் பொறுப்பு எனக் கூறுவது ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்தார். கடந்த 7 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதித்து அவர்கள் வசூலித்து இருக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் பார்த்துக் கொண்டார். ஏனென்றால் அவருக்குப் பொருளாதாரம் தெரியும். டீசல் விலை ஏறினால் விலைவாசி உயரும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்திற்கு வந்தால் அந்த மாநில அரசாங்கத்தினுடைய உணர்வுகள், அந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை விட அதிக அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என நினைத்து செயல்பட்டால் தோல்வியில்தான் முடியும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.