'அது நடந்தால் வருத்தப்பட வேண்டியது ஸ்டாலின்தான்' - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

mafa

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுகசார்பிலும்,திமுகசார்பிலும் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த சிலநாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் எனஅமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சட்டமன்றத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த சிலநாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். வரும் தேர்தலில் அதிமுகவுடன் 12 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையவாய்ப்புள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என ஒன்று அமைந்தால் வருத்தப்படப்போவது திமுக தலைவர் ஸ்டாலின்தான்'' எனக் கூறினார்.

admk Mafa Pandiyarajan stalin
இதையும் படியுங்கள்
Subscribe