Skip to main content

“உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, அண்ணாமலை ஆறுதல் கூறாதது வருத்தமளிக்கிறது..”  தமுமுக மாவட்டத் தலைவர்

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

It is sad that Annamalai did not go to the houses of the victims and offer our condolences

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்டச் செயலாளர் செல்வகணபதி என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையின்  மேல் தளத்தில் தீபாவளி பண்டிகைக்காகப் பட்டாசு விற்பனை செய்ய, பட்டாசுகளை வாங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், அந்த கடையில் கடந்த 26ஆம் தேதி இரவு தீவிபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.

 

இதனால் ஏற்பட்ட தீ, அந்தக் கடையின் பக்கத்தில் இருக்கும் பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்துக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்தக் கடையின் அருகே இருந்த தியாக துருகத்தைச் சேர்ந்த ஷா ஆலம் (24), சங்கராபுரத்தைச் சேர்ந்த சையத் காலித் (22), ஷேக்பஷீர் (60), நாசர் (60) மற்றும் அய்யாசாமி (65) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று காலை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த வள்ளி(62) மற்றும் சிறுவன் தனபால்(11) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 11 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சங்கராபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இந்தச் சம்பம் தமிழ்நாடு முழுக்க பெரும் கவலையை ஏற்படுத்தியது.

 

பட்டாசுக் கடை நடத்த உரிமம் பெற்றுள்ள செல்வகணபதி, விதியை மீறி அதிகளவிலான பட்டாசுகளை அங்குச் சேமித்து வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. விபத்து நிகழ்ந்த பகுதியை நேற்று பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, நிவாரணத் தொகையை அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இன்று மளிகைக் கடை உரிமையாளர் செல்வகணபதி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

It is sad that Annamalai did not go to the houses of the victims and offer our condolences
                                                       பசல் முஹம்மது

 

இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பசல் முஹம்மது, “நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டது. அந்தக் கடையின் மேல் மாடியில் குடோனாகவும், கீழே மளிகைக்கடையாகவும் செயல்பட்டுவருகிறது. அக்கடையின் பக்கத்தில் பேக்கரி இருக்கின்றது. பொதுவாகத் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிலிண்டர்கள் உபயோகம் அதிகமிருக்கும். அதனடிப்படையில் அக்கடையிலும் சிலிண்டர் இருந்திருக்கிறது. அதிகளவில் பட்டாசுகளைச் சேமித்து வைத்ததன் காரணமாகவே அக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த பேக்கரிக்கும் தீப் பரவி, சிலிண்டர்கள் வெடித்து பெரும்விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குடும்பத்தைக் காக்கும் வயதுடையோர். 

 

இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போதுதான் தெரிகிறது, கடை பாஜக மாவட்டச் செயலாளருடையது என்று. இதில் ஒன்றும் குழப்பமில்லை. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்க்க வந்த அண்ணாமலை, தான் கடந்து வந்த பாதையில் உள்ள உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. எழுத்தாளரும் தமிழ்ப் படைப்பாளர் சங்கத்தின் தலைவருமான குறிஞ்சி அரங்க செம்பியன் வீட்டுக்குச் சென்ற தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி ஆறுதல் கூறினர். தமிழக அரசு சார்பாகக் காயப்பட்டவர்களுக்கு ரூ. 1 இலட்சமும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை, காயம்பட்டவர்களுக்கு ரூ.5 இலட்சமாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சமாகவும் வழங்கி, அவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.