Skip to main content

“உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, அண்ணாமலை ஆறுதல் கூறாதது வருத்தமளிக்கிறது..”  தமுமுக மாவட்டத் தலைவர்

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

It is sad that Annamalai did not go to the houses of the victims and offer our condolences

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்டச் செயலாளர் செல்வகணபதி என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையின்  மேல் தளத்தில் தீபாவளி பண்டிகைக்காகப் பட்டாசு விற்பனை செய்ய, பட்டாசுகளை வாங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், அந்த கடையில் கடந்த 26ஆம் தேதி இரவு தீவிபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.

 

இதனால் ஏற்பட்ட தீ, அந்தக் கடையின் பக்கத்தில் இருக்கும் பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்துக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்தக் கடையின் அருகே இருந்த தியாக துருகத்தைச் சேர்ந்த ஷா ஆலம் (24), சங்கராபுரத்தைச் சேர்ந்த சையத் காலித் (22), ஷேக்பஷீர் (60), நாசர் (60) மற்றும் அய்யாசாமி (65) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று காலை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த வள்ளி(62) மற்றும் சிறுவன் தனபால்(11) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 11 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சங்கராபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இந்தச் சம்பம் தமிழ்நாடு முழுக்க பெரும் கவலையை ஏற்படுத்தியது.

 

பட்டாசுக் கடை நடத்த உரிமம் பெற்றுள்ள செல்வகணபதி, விதியை மீறி அதிகளவிலான பட்டாசுகளை அங்குச் சேமித்து வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. விபத்து நிகழ்ந்த பகுதியை நேற்று பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, நிவாரணத் தொகையை அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இன்று மளிகைக் கடை உரிமையாளர் செல்வகணபதி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

It is sad that Annamalai did not go to the houses of the victims and offer our condolences
                                                       பசல் முஹம்மது

 

இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பசல் முஹம்மது, “நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டது. அந்தக் கடையின் மேல் மாடியில் குடோனாகவும், கீழே மளிகைக்கடையாகவும் செயல்பட்டுவருகிறது. அக்கடையின் பக்கத்தில் பேக்கரி இருக்கின்றது. பொதுவாகத் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிலிண்டர்கள் உபயோகம் அதிகமிருக்கும். அதனடிப்படையில் அக்கடையிலும் சிலிண்டர் இருந்திருக்கிறது. அதிகளவில் பட்டாசுகளைச் சேமித்து வைத்ததன் காரணமாகவே அக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த பேக்கரிக்கும் தீப் பரவி, சிலிண்டர்கள் வெடித்து பெரும்விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குடும்பத்தைக் காக்கும் வயதுடையோர். 

 

இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போதுதான் தெரிகிறது, கடை பாஜக மாவட்டச் செயலாளருடையது என்று. இதில் ஒன்றும் குழப்பமில்லை. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்க்க வந்த அண்ணாமலை, தான் கடந்து வந்த பாதையில் உள்ள உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. எழுத்தாளரும் தமிழ்ப் படைப்பாளர் சங்கத்தின் தலைவருமான குறிஞ்சி அரங்க செம்பியன் வீட்டுக்குச் சென்ற தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி ஆறுதல் கூறினர். தமிழக அரசு சார்பாகக் காயப்பட்டவர்களுக்கு ரூ. 1 இலட்சமும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை, காயம்பட்டவர்களுக்கு ரூ.5 இலட்சமாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சமாகவும் வழங்கி, அவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.