''அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?''- தமிழிசை கேள்வி!

'Is it right to criticize him with hot words?' - Tamil music question!

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம்வெளியிட்டுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா எழுதிய முன்னுரை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள முன்னுரையில், "பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

'Is it right to criticize him with hot words?' - Tamil music question!

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ''இளையராஜாவை தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்துச்சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டும்தானா? அல்லது சிலருக்கு மட்டும்தானா? கருத்தைச் சொல்ல இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே'' என தெரிவித்துள்ளார்.

ilayaraja modi tamilisai
இதையும் படியுங்கள்
Subscribe