Advertisment

செட்டிநாடு குழுமத்தில் ஐ.டி ரெய்டு... 7 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்!    

it raid

செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ற நிலையில், கணக்கில் காட்டப்படாத7 கோடிரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறைதெரிவித்துள்ளது.

Advertisment

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், சென்னை, கரூர், கோவை, காஞ்சிபுரம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனை இன்று (09/12/2020) காலை 08.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. சோதனையில், சுமார் 100 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Advertisment

it raid

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட் உற்பத்தி, மின் உற்பத்தி, போக்குவரத்து, கல்வி நிலையங்கள், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறநிலையில், இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத7 கோடிரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைதெரிவித்துள்ளது. செட்டிநாடுகுழுமத்தில்வருமான வரித்துறையினர் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

it raid

செட்டிநாடுகுழுமம் மட்டுமல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்60 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

it raid Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe