Skip to main content

''ஒரு நாளில் 24 லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி 7 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதெல்லாம் நியாயம் இல்லை'' - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

"It is not fair to conduct an exam for 24 lakh people in one day and select 7 thousand people" - Minister Palanivel Thiagarajan's speech

 

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

 

அந்த தீர்மானத்தில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்வானது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி முகாமில் இருக்கும் 700க்கும் மேற்பட்டோர் நில அளவர் ட்ராஃப்ட்மேன் பணியிடங்களுக்கு தேர்வு பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். தென்காசியில் ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோரும் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள்.

 

nn

 

இது தொடர்பாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''இது தொடர்பாக ஆராய்ந்து டிஎன்பிஎஸ்சி விரிவான விளக்கத்தை விளக்கிக் கூறி இருக்கிறேன். டிஎன்பிஎஸ்சி பல வகையில் சீர்திருத்தக்கூடியது என்பதை நானே இங்கு கூறியிருக்கிறேன். மூன்று ஆண்டுகளாக தேர்வே நடக்கவில்லை. அதற்கு முன் நடந்த ஆயிரம் பொறுப்புகளுக்கான தேர்வுகள் எல்லாம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு அப்படியே நிலுவையில் இருக்கிறது. மனிதவளம்தான் என்னை பொறுத்தவரை நிதியை விட அரசுக்கு முக்கியமானது என்பதற்காகவே தான் போன நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன். சீர்திருத்தக் குழு உருவாக்கப்பட்டு தேர்வு மையங்கள், பயிற்சிகள் என எல்லா வகையிலும் மனிதவள மேலாண்மையைச் சிறப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிட்டேன். அதை இவர்கள் எதிர்த்தார்கள்.

 

திடீரென எனக்கு ஒரு கோப்பு வருகிறது, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு 45 கோடி ரூபாய் கூடுதலாக வேண்டும் என்று. என்னவென்று போய் பார்த்தால் 7,000 இடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சுமார் 100 கோடி தாளை பின் செய்ய வேண்டும். 2,400 மையங்களில் தேர்வை நடத்த வேண்டும். இதற்கு 6 ஆயிரம் 7 ஆயிரம் இன்விஜிலெட்டர்ஸ் வேண்டும். இவர்களுக்கெல்லாம் 400 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனப் படிப்படியாக ஆய்வு செய்தேன்.

 

இந்த விதிமுறைகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு ஏற்புடையதல்ல. இது என்னுடைய நிர்வாக கருத்து. வருடத்திற்கு ஒரு தடவை 24 லட்சம் பேருக்கு தேர்வு நடத்துவது எல்லாம் நியாயமே இல்லை. 24 லட்சம் பேர் தேர்வு அதில் எழுதி ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்கு பல காடுகளில் மரங்களை வெட்டி நூறு கோடி பக்கத்தை டைப் அடித்து, தேர்வு கண்காணிப்பாளர்களை போட்டு, 42 கோடி செலவாகி ஒரே நாளில் தேர்வு நடப்பதெல்லாம் இன்று இருக்கக்கூடிய டெக்னாலஜி காலத்தில் சரியான விதிமுறையை இல்லை என்பதற்காகத்தான் நானே முதல் ஆளாக ஆரம்பித்து இந்த அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என முதல்வரின் அறிவுரைப்படி பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

“பா.ஜ.க. வாஷிங் மிஷின் போல் செயல்படுகிறது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
BJp Works like a washing machine  Minister Palanivel Thiagarajan
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி பேசுகையில், “அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் என 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.

அதன் பின்னர் இவர்கள் தங்களது கட்சிகளை விட்டு பா.ஜ.க.வின் இணைந்து விட்டனர்.  இவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் ஆவியாகிப் போய்விட்டன. ஏனென்றால் பாஜகவின் வாஷிங் மெஷினில் சேர்ந்து வெள்ளையோடு வெள்ளையாகி விட்டன” எனத் தெரிவித்தார். முன்னதாக நேற்று (02.04.2024) பரப்புரை மேற்கொண்ட போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.