Skip to main content

அரிவாளை கையில் வைத்திருப்பதற்கும் வெட்ட வருவதற்கும் வித்தியாசம் இல்லையா?? -கருணாஸ் கைது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

இன்று விருதுநகர் இராஜபாளையதில் செய்தியாளர்களை சந்தித்த பால்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,

 

rb

 

கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு காரணம் அவர் பேசிய பேச்சின் வீரியம் அதிகம் எனவேதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது குறித்து எந்த பாரபட்சமும் இல்லை மற்றவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரிவாளை கையில் வைத்திருப்பவருக்கும், அரிவாளால் வெட்ட வருபவருக்கும்  வித்தியாசமில்லையா?  வெட்ட வருபவரை தானே முதலில் பிடிக்க வேண்டும். கருணாஸ் வெட்டுவேன் என்கிறார், என்னை கேட்டுவிட்டு வெட்டுங்க என்கிறார். கருணாஸ் எப்படி இருந்தார், எங்கே இருந்தார் என செய்தித்துறை அமைச்சராக இருந்த எனக்கு தெரியும்.

 

திருவாடனை தொகுதியில் நிற்கும் பொழுது எனக்கு ஒத்துழைப்பே இல்லை என கதறினார். நான் அப்போது அங்கிருந்தவர்களிடம் பேசி அவருக்கு வேலை செய்து தரும்படி பேசி அதன்பின்தான் அவர் வெற்றிபெற்றார். வெற்றிபெற்றவுடன் அம்மாவின் ஆட்சியின் சிறப்பு பற்றி பேசிய கருணாஸ் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பற்றியும் பேசியுள்ளார். இந்நிலையில் எதோ ஒரு நினைப்பில் தன்னால்தான் இந்த ஆட்சி வந்தது என்கிறார். ஜனாதிபதியையே நான்தான் ஜெயிக்க வைத்தேன் என்கிறார். அவர் ஓட்டு போட்டு மட்டுமா அவர் ஜெயிச்சாரு எல்லாருமேதான் ஓட்டு போட்டோம். நாங்களும் பங்களிப்பு கொடுத்தோம் என்று சொல்வதை விடுத்து நான்தான் ஜெயிக்கவைத்தேன் எனக்கூறும் அளவிற்கு அவ்வளவு பெரிய அதிகாரமா இருக்கு கருணாஸிடம்.

 

கருணாஸ் என்று பெயர் வைத்தாலே இப்படித்தான் இதேபோல்தான் இலங்கையிலும் ஒரு கருணா தமிழர்களை காட்டிக்கொடுத்து 2 லட்சம் இறப்புகளுக்கு காரணமாக இருந்தார். இப்பொழுது தமிழ்நாட்டில் எல்லா சமுதாயமும் இணக்கமாக இருக்கிற நேரத்தில் பெரிய கலவரத்தை மேற்கொண்டு எடப்பாடி ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கித்தரும் அளவிற்கு ஒரு ஏவுகணை தாக்குதல், அதிகார தாக்குதல் நடத்தவே இப்படி நடைபெற்றுவருகிறது எனக்கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.