தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், அண்மையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என அவரது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதேபோல் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற பேச்சும் அடிபட்டது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், ''பொங்கல் நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருவதால் திமுகவிற்கு ஒரு டிப்ஸ் தருகிறேன். உள்ளாட்சித் தேர்தல் வருவதால் பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் தரலாம். இது பாஸ்ட்ஃபுட் காலம் என்பதால் உதயநிதியை உடனே அமைச்சராக்க வேண்டும் என திமுகவினர் நினைக்கின்றனர்'' என பேசினார்.