Skip to main content

"தி.மு.க. ஆட்சியில்தான் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்படுகிறது"- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

"It is in the DMK regime that orders of appointment based on mercy are given immediately"- Minister I. Periyasamy's speech!

 

கூட்டுறவுத் துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகள் மூன்று பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவுக் கல்லூரி யில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை சேவுகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்த முருகனின் உறவினர் வசந்திக்கு, கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் ஏவலர் பணியும், வத்தலக்குண்டு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் கூட்டுறவு சிக்கன நாணயத்தில் பணிபுரிந்த சீனிவாசன் என்பவரின் மகன் விக்னேஷ்வரனுக்கு, டிடி523 மேட்டுப்பட்டி கூட்டுறவு நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் சிற்றெழுத்தர் பணியும், கிழக்கு செட்டியபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியின்போது உயிரிழந்த விசுவநாதன் உறவினர் கிஷோர் மங்களத்திற்கு கிழக்கு செட்டியப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் விற்பனையாளர் பணிக்கான ஆணையையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். 

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது தான் கூட்டுறவுத் துறையில் பணியின் போது, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் வருட கணக்கில் காத்திருந்தவர்களுக்கு கூட தி.மு.க. ஆட்சியில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது" என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.