Skip to main content

ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானதா?

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ஆனால் இந்த ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பது பெரிய ஆபத்தில் முடியும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்

இது குறித்து நாம் அவரிடம் பேசுகையில்… 

தெற்கு ரயில்வேயில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் தண்டவாள பராமரிப்பாளர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் துறை களாசிகள் பணியிடங்கள் பாதுகாப்பு துறைகளை சார்ந்தவை. இந்த பிரிவில் காலியிடங்கள் உள்ளதால் நிலமையை சமாளிக்க கடைநிலை ஊழியர்களாக 2393 முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க தற்போது முடிவு செய்து இருக்கிறது. 

 

railway

 

மேலும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020 ம் ஆண்டுதான் மீண்டும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கும். இதனால் நிரந்தர ஊழியர்கள் நியமனத்திற்கு உடனடி வாய்ப்பு இல்லை. 

இதற்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க பலமுறை ரயில்வே கோட்டங்கள் விளம்பரம் செய்தன. தினக்கூலிகளாக சேர அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் கூடுதல் சலுகைகளை அறிவித்து தெற்கு ரயில்வே மூத்த பர்சனல் அதிகாரி இந்துமதி கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதி விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார். மாதாந்திர தொகுப்பு ஊதியமாக பெரு நகரங்களில் ரூ. 22072 , நடுத்தர நகரங்களில் ரூ. 24660 , சிறிய ஊர்களில் ரூ.22968 வழங்கப்படும் ரூ. 5000 சீருடைப்படி தரப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பணிக்கு சென்று வர பயண பாஸ் வழங்கப்படும். பணி நியமத்தமாக வெளியூர்கள் சென்றால் ரூ.500 பேட்டா தரப்படும், வாராந்திர விடுப்பு வழங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. முப்படைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்த்து 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். விளம்பரம் வெளியான தேதியில் ஐம்பது வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. 

நிர்வாகம் வேலையை விட்டு நீக்கினாலோ, இவர்கள் வேலையை விட்டு நின்றாலோ 15 நாட்கள் நோட்டிஸ் அவசியம். மூன்று நாட்கள் தொடர்ந்து பணிக்கு வரவில்லை என்றால் பணி நீக்கம் அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்து இருக்கிறது. 

அரசு, பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளில் நிரந்த வேலைகளை இட ஒதுக்கீடுகள் மூலம் பெற்று வருகிறார்கள். இதைவிட கூடுதல் சலுகைகள் வேலை உத்தரவாதம் என கருதுவார்கள். இந்த அறிவிப்பு மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானது. பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்காத பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்க இயலாது. 

வாரியத்தை அணுகி சிறப்பு விலக்கு பெற்று கடைநிலை ஊழியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறது என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.