Skip to main content

மத்திய அரசின் பேச்சை கேட்டு அரசுபள்ளிகளை மூட தமிழக அரசு நினைப்பது கண்டிக்கத்தக்கது-ஜீ.ராமகிருஷ்ணன்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

 

cpm

 

திருவாரூர் வந்திருந்த  சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அதில்
 

"தமிழகத்தல் மணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசின் முடிவின்படி தமிழக அரசு அறிவித்திருப்பது தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்தசெயல் வன்மையாக கண்டிக்கதக்கது. அரசு பள்ளிகளை மூடுவதை விட்டு விட்டு மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்டுள்ள 18 பக்கம் அறிக்கையில் கார்பரேட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை திரும் பெறாவிட்டால் வங்கிகள் மட்டுமின்றி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும்,  வாரக் கடன் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் ரூ 4 லட்சம் கோடி வாரக் கடனை தள்ளுபடி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக தொழில், விவசாயம், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் டீசல் வரலாறு காணத விலை உயர்வால் நாட்டின் பொருளாதார நிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாருர், நாகை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 80% நேரடி நெல் விதைப்பில் முளைத்த சம்பா பயிர்கள் கருகி வருகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழகத்தில் ரெய்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஊழல் செய்த அமைச்சர்கள் மற்றும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்றார்  ராமகிருஷ்ணன்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.