Skip to main content

கரோனா பயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர்! மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை!!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த 35 வயதான இளைஞர் மணிகண்டன். இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 21ஆம் தேதி இலங்கையிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டனை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

 

 Isolated youngster in fear of Corona!.. incident in corona


இந்தநிலையில் நேற்று மாலை ஜவுளி வியாபாரியான மணிகண்டனோ சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தவர் திடீரென்று அவர் தனது ஆடைகளை கலைத்து விட்டு தெருவில் நிர்வாணமாக ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை பிடிப்பதற்காக பின்னால் ஓடினார்கள். அப்போது அவர் அங்கு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 90 வயதான நாச்சியம்மாள் என்ற மூதாட்டியின் கழுத்தை பிடித்து கடிக்க தொடங்கினார்.  இதில் வலி தாங்க முடியாமல் நாச்சியம்மாள் அய்யோ... அம்மா...என்று கத்த தொடங்கினார். அதைக்கண்டு அங்கு வந்த உறவினர்கள் நாச்சியம்மாளின் கழுத்தை கடித்தபடி இருந்த மணிகண்டனை தள்ளி விட்டுவிட்டு அவரை காப்பாற்றினர்.

 

 Isolated youngster in fear of Corona!.. incident in corona


இருப்பினும் நாச்சியம்மாள்  கழுத்திலிருந்த ரத்தம் அதிகமாக கொட்ட  தொடங்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து, உடனடியாக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிகிச்சை  பலன் அளிக்காததால் நாச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுசம்பந்தமாக போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஜவுளி வியாபாரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட மணிகண்டன் மனநிலை பாதிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இப்படி கரோனா பீதியால்  தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாலிபர் அப் பகுதியில் உட்கார்ந்திருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.