Advertisment

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை… படங்கள்

செப்டம்பர் ஒன்று முதல் அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று இஸ்லாமியர்கள் தொழுகை செய்தனர்.

Advertisment

இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை என்பது முக்கியமான தொழுகையாக உள்ளது. 164 நாட்கள் ஊரடங்கு முடிந்து தமிழக அரசு வழிபாட்டுதலங்களை திறக்க செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து அனுமதி அளித்தது. அதன்படி வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிகொடுத்து இன்று முதல் வெள்ளிக்கிழமையான இன்று இஸ்லாமியர்கள் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று தொழுகை செய்தனர்.

Advertisment

அரசு அறிவுறுத்தலின்படி தொழுகைக்காக மசூதிக்குள் செல்வதற்குமுன் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துகொண்டு, முகக்கவசம் அணிந்துகொண்டு, தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

Islam muslims
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe