Skip to main content

வங்கி கணக்கை முடித்துக் கொள்ளவந்த இஸ்லாமிய மக்கள்; மாயவரம் பரபரப்பு

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வங்கியில் வைத்திருந்த தங்களின் இருப்பு தொகையை எடுக்க புறப்பட்டு வந்ததால் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் இந்தியாவை பெரும் போராட்டகளமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்,மாணவர்களும் சட்டத்திற்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்து போராடி வருகின்றனர். அமைதிப்பேரணி, ஆர்பாட்டம், தெருமுனைப்போராட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு போராட்ட வரிசையில் தற்போது ஒவ்வொரு பகுதியிலும் இரவு பகல் என தொடர் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.

 

mayawaram

 

இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரிழந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள், அந்த வங்கியில் அதிக இருப்பு வைத்திருப்பவர்களும் இஸ்லாமியர்கள் தான். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அது சட்டத்திற்கு எதிராக தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அவர்கள் அனைவரும் அமைதியான முறையில் திரண்டுவந்து எடுத்தனர். இந்த செய்தியை அறிந்துகொண்ட வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளிவாசலுக்கே சென்று அங்குள்ள ஜமாத்தார்களை சந்தித்து நாங்கள் என்ன செய்யமுடியும், உங்கள் செயலால் எங்களது வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல் பேசி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

குடியுரிமை சட்ட விவகாரத்தில் அடுத்தடுத்த போராட்டம் வெடிப்பதால் தமிழகமே அமைதியில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
nn

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.