''போராடியவர்கள் மீது தடியடி நடத்துவதா...?''- கோவை ஆத்துப்பாலத்தில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!  

சென்னையில் நடந்த தாக்குதலை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆத்துப்பாலம்., உக்கடம் பகுதிகளில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி காவல்துறை அடக்குமுறை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Islamic organizations struggle in Coimbatore Athuppalam!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதா..? என கோஷங்கள் எழுப்பப்பட்டது. சென்னையில் தாக்குதல் நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

தமிழக அரசு காவல்துறை மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டமானது கைவிடப்படாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

citizenship amendment bill Islam kovai
இதையும் படியுங்கள்
Subscribe