Skip to main content

''இறந்தவருக்கு 5 கோடி நிதி கொடுங்க'' -இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை!!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

மத்தியரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், மக்கள் பதிவு சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை மக்கள் தான் என்பதால் அவர்கள் போராட்டத்தில் முன்னணியில் உள்ளனர்.

 

Islamic Organization demands!


இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க வேண்டும்மென காவல்துறை திடீரென நடத்திய தடியடியில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பஸ் லுல் ஹக் என்பர் பலியானார். இதனால் தமிழகம் முழுவதும் அன்று இரவு போராட்டம் நடைபெற்றது.

அதோடு தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நசுக்க தடியடி நடத்தி அராஜகமாக நடந்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த லுல்ஹக் குடும்பத்திற்கு 5 கோடி நிதி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை செய்யவில்லையென்றால் நீதிக்கேட்டு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி  ஒருங்கிணைப்பாளர் நாசீர் கான் வாணியம்பாடியில் அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.