Skip to main content

''இறந்தவருக்கு 5 கோடி நிதி கொடுங்க'' -இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை!!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

மத்தியரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், மக்கள் பதிவு சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை மக்கள் தான் என்பதால் அவர்கள் போராட்டத்தில் முன்னணியில் உள்ளனர்.

 

Islamic Organization demands!


இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க வேண்டும்மென காவல்துறை திடீரென நடத்திய தடியடியில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பஸ் லுல் ஹக் என்பர் பலியானார். இதனால் தமிழகம் முழுவதும் அன்று இரவு போராட்டம் நடைபெற்றது.

அதோடு தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நசுக்க தடியடி நடத்தி அராஜகமாக நடந்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த லுல்ஹக் குடும்பத்திற்கு 5 கோடி நிதி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை செய்யவில்லையென்றால் நீதிக்கேட்டு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி  ஒருங்கிணைப்பாளர் நாசீர் கான் வாணியம்பாடியில் அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மின்கம்பம் மீது கார் மோதி விபத்து; 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Accident involving a car hitting a power pole; 6 college students were injured

வாணியம்பாடியில் மின்கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவர்கள் 6 பேர்  கல்லூரி முடிந்து காரில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில்  பயணம் செய்த ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த நவ்மான், பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நியாமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான்  உள்ளிட்ட  மாணவர்கள்  படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் நவ்மான் (19)உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.