Skip to main content

ஈஷாவுக்காகச் சட்டத்தைத் திருத்திய எடப்பாடி அரசு! -அம்பலப்படுத்தும் சுற்றுச்சூழல் போராளிகள்

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

 

கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தினர் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகளைத் திருத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு (30.03.2020) புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறது எடப்பாடி அரசு. 


’’தமிழகத்தைக் கரோனா தொற்று நோய் பரவும் மாநிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்களிடையே அச்சம் பரவியுள்ள சூழலில், தனியார் நலன்களுக்கான கடுமையாக உழைக்கிறது எடப்பாடி அரசு‘’ என்கிற குற்றச்சாட்டுகளை சுமத்துக்கிறார்கள் சுற்றுச் சூழலியாளர்கள். 


சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக களத்தில் போராடி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.இந்த அமைப்பின் மூத்த உறுப்பினரான சுந்தர்ராஜன், ’’இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளைக் கடந்த 26.12.2004-ல் சுனாமி தாக்கியது. அப்போது,இந்திய காப்புரிமைச் சட்டத்தில் மிகவும் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. அதற்கான சட்டத் திருத்தத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையொப்பம் இட்டார்.

சட்டத்திருத்தம் செய்யப்படும் வரை, ஒரு பொருள் செய்யப்படும் முறைக்கு மட்டுமே காப்புரிமை (Process patent) வழங்கப்பட்டு வந்தது.ஆனால்,  ஒரு பொருளுக்கே காப்புரிமை (Product patent) வழங்கும் உரிமை அந்த சட்டத்திருத்தம் வழங்கியது.குறிப்பிட்ட பொருளைக் காப்புரிமை பெறாத மற்ற நிறுவனங்கள் வேறு முறைகளில் உற்பத்தி செய்வதைத் தடுக்கும் சட்ட நடைமுறை அது.இதன் மூலம் பெருவணிக நிறுவனங்களின் குறிப்பிட்ட பொருட்களின் மீதான ஏகபோக உற்பத்தி உரிமை மேலும் வலுப்படுத்தப்பட்டது.

 

isha


உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இது மக்களுக்கு எதிரான விளைவுகளைத் தரக்கூடியது. ஆளும் வர்க்கம் சொல்லியதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்ட அப்துல் கலாம்,மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அன்று கையெழுத்திட்டார்.

இப்படிப்பட்ட சூழலில், தற்போது கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தும் சூழலில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் ஒரு சட்டத்திருத்தத்தைக் கடந்த 30.03.2020 செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழகத்திலுள்ள மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு (Hill Area Conservation Authority – HACA) கடந்த 1990-ஆம் ஆண்டு Town and Country Planning Act கீழ் நிறுவப்பட்டது. 

காட்டுப்பகுதி சுருங்கி வருவதைத் தடுப்பதற்காகவும், காடு சார்ந்த வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாகக் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் உயிரியல் பன்மை வளமிக்க மலைப் பகுதியாக,மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள சூழலில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் உள்ள காடு மற்றும் காட்டுக்கு அருகாமையில் உள்ள இடங்கள் இந்த  மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் ‘  பொறுப்பில் விடப்பட்டன. அந்த வகையில், இப்பகுதியில் இருக்கும் நிலத்தை எந்தப் பயன்பாட்டுக்கு மாற்றி அமைத்தாலும், இவ்வமைப்பின் அனுமதியுடன் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் அந்த நில அமைப்பு மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்.

இந்த நிலையில் கடந்த 2016, அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்னதாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் நிலம் வாங்கியவர்கள் அந்தப் பகுதிகளில் வீட்டுமனை வியாபாரம் செய்யும் வகையிலும், கட்டிடங்கள் எழுப்புவதற்கு அனுமதிக்கும் வகையிலும் புதிய சட்டவிதிமுறைகள் (Tamil Nadu Regularization of Unapproved Layouts and Plots in Hill Areas Rules, 2020 ) வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை கடந்த 30.3.2020 பிறப்பித்திருக்கிறது எடப்பாடி அரசு. 

 

rrrr



இந்த விதிமுறைகள் மூலம் உரிய சட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கின்ற வாய்ப்புகளும் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளிடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர்களிடமோ எவ்விதமான ஆலோசனையும் மேற்கொள்ளாமலே இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.  

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நிலம் வாங்கிய ஏழை மற்றும் அப்பாவி மக்களின் துயர் துடைப்பதற்காக இந்தப் புதிய விதிமுறை வகுக்கப்படுவதாக அரசாணையின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.யானை வழித்தடம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குள்தான் சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.இந்த ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடம் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் ,அப்பகுதியை யானை வழித்தடம் என அறிவிக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அவ்வாறு அறிவிக்கவில்லை.

ஆக, அப்பகுதிகளில் மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையும், சிலைகளையும் நிறுவியுள்ள  ஈஷா மையம், தற்போதைய புதிய விதிமுறைகளின்  கீழ்  பலன் அடையப்போகிறது.இந்த ஈஷா மைய நிர்வாகிகளை ஏழைகள் என்றோ, படிப்பறிவற்ற அப்பாவிகள் என்றோ குறிப்பிடமுடியாது.ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகிய அமைப்புகளின் முன் நிலுவையில் இருக்கும் நிலையில்,இந்தப் புதிய விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசு கண்டனத்திற்குரியது.புதிய விதிமுறைகள் ஈஷா மையம் உள்ளிட்ட பெரும் பணக்கார தனியார் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்டிருக்கிறது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து கவனம் செலுத்தும் சூழலில்,எவ்வித அவசரமும் இல்லாத இந்தப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதன் நோக்கம் சந்தேகத்திற்குரியது.காடுகளுக்குத் தொடர்பில்லாமல் இருக்கும் பகுதிகள் மீது  உரிய ஆய்வுகளை நடத்திய பிறகும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரிடம் விரிவான ஆலோசனை நடத்திய பிறகும், காட்டுப் பகுதிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாத வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தப் புதிய விதிமுறையை எந்தவிதமான நிபந்தனையுமின்றி தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். இல்லையேல்,போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும்!‘’ என்கிறார் மிக ஆவேசமாக சுந்தர்ராஜன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.