பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக்கொத்தடிமைகளாக நடத்தி, திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள், சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில்காவல்துறை இயக்குநரைசந்தித்து புகார் மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

Advertisment