Skip to main content

நீர்ப்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்- கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆர்ப்பாட்டம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

kongu

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தமிழகத்தில் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் சேலத்திலும் மற்ற நிர்வாகிகள் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல்லில் நேற்று ஆர்பாட்டம் நடத்தினார்கள் அதில்,

 

"தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை எல்லாம் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க முடியும். இந்தாண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையில் கர்நாடக அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

 

kongu

 

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு 5-ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி வழிந்தது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த தண்ணீரில் முக்கால்வாசி உபரிநீராக கடலில் கலந்ததே தவிர தமிழக மக்களுக்கு துளியும் பயன்படவில்லை. அதேபோல் பவானிசாகர், அமராவதி, திருமூர்த்தி மற்றும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளும் நிரம்பி உபரிநீர் வீணாக கடலில் கலந்தது. 

 

 

மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு எடுத்துவிட்டால் தமிழகத்தின் மொத்த தண்ணீர் தட்டுப்பாடும் தீர்ந்துவிட்டது போல ஒரு மாய தோற்றம் உருவாகிறது. தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளை தவிர உள்மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையே தொடர்கிறது. 

 

கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை மக்களின் பயன்பாட்டிற்காக உள்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களையும், நதிகளை இணைக்கும் திட்டங்களையும் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும். அமராவதி, நொய்யல், திருமணி முத்தாறு மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்டவைகளில் சாயக்கழிவுகளை அனுமதி இல்லாமல் கொட்டி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீரும் மாசடைந்து வருகிறது. இந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் புற்றுநோயாலும், மலட்டுத்தன்மையாலும் மற்றும் தோல் வியாதிகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

 

 

ஒவ்வொரு தேர்தலின்போதும் குறிப்பாக கொங்கு மண்டல மக்களுக்கு வாக்குறுதிகளாக கொடுக்கப்படும் நீர்பாசன திட்டங்களான மேட்டூர் உபரிநீர் திட்டம், திருமணி முத்தாறு – கோரையாறு இணைப்பு திட்டம், சரபங்கா – வசிஷ்ட நதி திட்டம், அவினாசி - அத்திக்கடவு திட்டம், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம், மணியாச்சி – வழுக்குபாறை திட்டம், T.N.பாளையம் - வேதபாறை தடுப்பணை திட்டம் மற்றும் தோனிமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றக் கோரியும், ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதை தடுக்கக்கோரியும், ஏரி, குளங்களை சரிவர தூர்வார வேண்டும்"  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்  ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். 

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.