Skip to main content

"அரசு வேலைகளில் முறைகேடுகள் செய்தால்தான் காசு பார்க்க முடியும்" ஊராட்சி செயலரின் ஓபன் டாக்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
jk



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் அமிர்தலிங்கம். அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பாண்டியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அரசு பணிகள் தொடர்பாக கைபேசி வழியாக பேசிக்கொண்ட  உரையாடல் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. 


அந்த உரையாடலில், "அரசாங்க வீடு கட்டுதல், தார் சாலை அமைத்தல், அரசு கட்டிடங்கள் கட்டுதல், மினி டேங்க் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் மனசாட்சியுடன் செயல்பட்டால் எதுவும் சம்பாதிக்க முடியாது.  நஷ்டம் தான் ஏற்படும். இந்த மாதிரி வேலைகளில் மண்ணை வாரி கொட்டி, மக்களை ஏமாற்றினால் மட்டும்தான் நாலு காசு பார்க்க முடியும்"  என்று பேசிக் கொள்கின்றனர். மேலும் அரசு பணிகளை வாங்குவதற்கு கீழ்மட்ட அதிகாரி முதல் உயர்மட்ட அதிகாரிகள் என அனைவருக்கும் கையூட்டு கொடுப்பதாகவும், அவ்வாறு  வாங்கப்படும் வேலைகளை, ஒழுங்காக செய்தால் குடும்பத்தோடு விஷமருந்து அருந்துவதற்கு சமம் என்றும், முறைகேடாக பணி செய்தால் மட்டும்தான் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்றும் அதற்கு உண்டான வழிகளை நான் சொல்லி தருகிறேன் என்று ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் கூறுகிறார். 

 

 

h



மேலும் அக்கிராமத்தில் உள்ள பாஸ்கர் என்பவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வேலைகளை முடித்ததினால் தான் தற்போது எவ்வித நஷ்டம் ஏற்படாமல் லாபம் பார்த்திருக்கிறார் என்றும் உரையாடலில் தெரிவிக்கிறார். அக்கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு சில வருடங்களிலேயே முற்றிலுமாக இடிந்து விழுவது போல் உள்ளது என்றும், அவ்வாறு பணிகள் செய்தால் மட்டும்தான் லாபம் பார்க்க முடியும்"  என்றும் கூறுகிறார். இதுகுறித்து நடைபெறும் அனைத்து ஊழல்கள் பற்றி திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

பழைய பென்சன் திட்டம்: பரவும் போலிச் செய்தியும் அறியப்பட்ட உண்மையும்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

The Old Benson Project: Spreading Fake News and Known Truth

 

பழைய பென்சன் திட்டத்தில் சேர விரும்புபவர்களின் பட்டியலை நிதித்துறை சேகரிப்பதாகவும் அதற்கான சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. ஆனால் நிதித்துறையின் அந்த சர்க்குலர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 

 

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். அப்படி நிரந்தரப்படுத்தப்படும்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த வகையில் நிரந்தரப்படுத்தப்பட்ட ஊழியர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அப்போது அவர்கள், "பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போதே நாங்கள் பணியில் சேர்ந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படிதான் பென்சன் வழங்க வேண்டும்" என நீதிமன்றத்தை அணுகினர். 

 

நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பலருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி பலரின் வழக்குகள் நிலுவையிலும் இருந்து வருகிறது. இதன் டேட்டாக்களைத் தான் துறை வாரியாக அனுப்பி வைக்கும்படி நிதித்துறை சர்க்குலர் அனுப்பியுள்ளது. மற்றபடி பழைய பென்சன் திட்டத்தில் சேர்பவர்களின் விருப்பப் பட்டியலை நிதித்துறை திரட்டவில்லை.