Skip to main content

100 நாள் திட்டத்தில் முறைகேடுகள்... பாஜக விவசாய அணி ஆலோசனை!

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Irregularities in 100 day plan ... BJP agriculture team advises!

 

தமிழக பாஜக விவசாய அணியின் கோவை மாவட்ட பெருந்கோட்ட  நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று கோவையில் நடந்தது. பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். பாஜகவின் தேசிய மாநில செயற்குழு உறுப்பினர் சசி மௌலி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

 

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி, விவசாய அணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் விஜயராகவன், மாநில துணைத் தலைவர்கள் மணி முத்தையா, முத்துராமன், ஜீவா சிவக்குமார், கோவிந்தன், மாநில செயலாளர் ஜெயக்குமார், கோட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் , நிர்வாகிகள், முன்னோடிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

Irregularities in 100 day plan ... BJP agriculture team advises!

 

விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள், நீண்ட வருடங்களாக தமிழக அரசு கிடப்பில் வைத்திருக்கும் நீராதார திட்டங்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த திட்டத்தில் நடந்து வரும் முறைகேடுகள், விவசாயப் பொருட்களின் கடுமையான விலை வீழ்ச்சி, விவசாயத்தை அழிக்க வந்துள்ள புதிய தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன. இவைகளுக்கு தீர்வுகாண மாநில தழுவிய விவசாய போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது.

 

பாஜக விவசாய அணி சார்பில் மாநில தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் கலந்தாலோசிக்க திட்டமிட்டிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.