Skip to main content

ஆபரேஷன் சமுத்ரசேது-2... 687 பேர்களுடன் ஜலஷ்வா கப்பல் தூத்துக்குடி வந்தது!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

iran india peoples arrived at thoothukudi indian ship

 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கிற இந்தியர்கள், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வேலையின்றித் தவிக்கின்றனர். எனவே அவர்கள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அவர்களை இந்தியா கொண்டு வரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் உண்டு.

 

iran india peoples arrived at thoothukudi indian ship

 

ஆபரேஷன் சமுத்ரசேது திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜூன் 2-ல் இலங்கையிலிருந்து 700 பேர்கள், ஜூன் 7-ல் மாலத்தீவிலிருந்து 700 பேர்கள் என தொடர்ந்து ஐ.என்.எஸ். ஜலஷ்வா, மற்றும் ஐராவத் கப்பல்களில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்ததில் முறையான சோதனைக்குப் பின்பு பேருந்துகளில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

iran india peoples arrived at thoothukudi indian ship

 

தற்போது ஈரான் மற்றும் அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில், அங்கு மீன் பிடித் தொழிலுக்குச் சென்ற 687 மீனவ இந்தியர்கள் கடந்த ஜூன் 25 ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து ஐ.என்.எஸ்.சின் ஜலஸ்வா கப்பல் மூலம் கிளம்பியவர்கள் 01/07/2020 காலை 09.00  மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் துறைமுகசபை பொறுப்புக் கழக நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

 

iran india peoples arrived at thoothukudi indian ship

 

ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் அங்கே மீன் பிடிக்கச் சென்றவர்கள். தற்போதைய கரோனா நெருக்கடி உயிர் அச்சம் காரணமாக வேலையில்லாமல் தவித்தனர். தாயகம் திரும்புவதற்காக தவித்தவர்களை இந்திய அரசு, ஆபரேஷன் சமுத்ர சேது-2 திட்டத்தின் அடிப்படையில் அழைத்து வந்துள்ளது. இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 514, கேரளாவின் 38, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 33 பேர் அடங்குவர்.

 

iran india peoples arrived at thoothukudi indian ship

 

துறைமுகம் வந்தடைந்த அவர்களுக்கு உடனடியாக தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டது. பின்னர் குடிவரவு நுழை மற்றும் உடைமை சோதனைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. அதன்பின் இவர்கள் தங்களின் சொந்த மாநிலம், சொந்த மாவட்டங்களுக்கு துறைமுக சபை பொறுப்புகழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கள் மக்கள் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள்” - மாலத்தீவு முன்னாள் அதிபர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former President of Maldives says Our people want to apologize to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார். 

Next Story

ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்; அதிகரித்த பலி எண்ணிக்கை

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Pakistan retaliates against Iran

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தையொட்டி, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இந்த நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் ஈரான் - பாகிஸ்தான் எல்லையையொட்டி 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஹிசாப் நகரை குறிவைத்து கடந்த 16ஆம் தேதி ஈரான் ராணுவத்தின் சிறப்பு படையினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீடுகள் பல தரைமட்டமாகி, கட்டடங்கள் பல இடிந்தும் விழுந்தன. மேலும், இந்த சரமாரி தாக்குதலில், கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்பட்டது.

இந்த திடீர் தாக்குதல் குறித்து ஈரான் செய்தி நிறுவனம் ஒளிபரப்பியதாவது, ‘பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-அல்-அட்ல் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் அமைத்திருந்த போர்த்தளங்கள், முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது எனவும், இதில் 2 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது’ என்றும் தெரிவித்தது. 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடத்தப்பட்ட ஈரானின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும்’ என்று கூறி எச்சரித்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறுகையில், “இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கு இடையிலான விவகாரம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்” என்று கூறினார். 

இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும், இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.