Skip to main content

சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு  புதிய எஸ்பிக்கள் நியமனம் 

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

ips officers appointment and transfers newly sp appointed in salem namakkal dharmapuri  

 

தமிழகம் முழுவதும் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகம் முழுவதும் காவல்துறையில் பதவி உயர்வு, தன் விருப்பம், நிர்வாக நலன் உள்ளிட்ட காரணங்களால் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று  (வெள்ளிக்கிழமை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பி ஆக பணியாற்றி வந்த ஸ்ரீஅபிநவ், ஹைதராபாத் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சொந்த மாநிலத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததன் பேரில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இதையடுத்து, சேலம் மாவட்ட புதிய எஸ்பி ஆக மருத்துவர் ஆர்.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சேலம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் ஆகும். நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரும் சொந்த மாநிலத்திற்கு பணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்பேரில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாய்சரண் தேஜஸ்வி ஆந்திர மாநில தேசிய காவலர் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டார்.

 

இதையடுத்து தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வரும் சி.கலைச்செல்வன், நாமக்கல் மாவட்ட புதிய எஸ்பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி ஆக பணியாற்றி வரும் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.