Skip to main content

சைலேந்திரபாபு போல் இருப்பாரா ஆபாஸ்குமார்?

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

 

சிறைத்துறை பணியாளர்களுக்கு 2019ம் வருடம் பொது பணியிடமாறுதல் எப்போதும் ஏப்ரல் மாதம் பொது பணியிட மாறுதல் நடைபெறும். காரணம் அதற்கு ஏற்றார் போல சிறைதுறை பணியாளர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் பணியிட மாறுதல் கொடுக்கவில்லை.  ஆனால் தற்போது பணியிட மாறுதலுக்கான ஆணை போட இருக்கிறார்கள். 

 

i

 

இதற்கு முன்பு சிறைத்துறையில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் எந்த வித மறைமுகம் இல்லாமல் நேரடியாக பணியிட மாறுதல் கொடுத்தார். அதே போன்று தற்போது உள்ள ஆபாஸ் குமார் ஐபிஎஸ் ஏடிஜிபி  அவர்களும் பணியாளர்களுக்கு கலந்தாய்வு வைத்து பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள்.

 

காரணம் சிறைத்துறை பணியாளர்கள் பணியிட மாறுதல், கலந்தாய்வு மூலம் நடைபெற்றால் பணம் வாங்கிவிட்டு பணியிட மாறுதல் போட முடியாது.  நேர்மையான முறையில் பணியிட மாறுதல் நடக்கும். இல்லை என்றால் சீனியாரிட்டி படி பணியிட மாறுதல் கிடைக்காது.  பணம் பத்தும் செய்யும்.   சீனியர் , ஜூனியர் எல்லோரும் பணியிட மாறுதல் கேட்டு இருக்கிறார்கள். முறையாக யாருக்கு பணியிட மாறுதல் கொடுக்கணுமோ அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

 

இதே போல் பணியிட மாறுதல் கேட்டு புதிதாக ஒரு சர்குலர் அனுப்பி விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஏடிஜிபி நேரடி பார்வையில் தகுதியான பணியாளர்களுக்கு பணியிட மாற்றுதல் வழங்க வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்றால் லட்ச கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் கேட்ட இடத்திற்கு பணியிட மாறுதல் கிடைக்கும். 

 

இன்னும் ஓரிரு நாளில் பணியிட மாறுதல் வழங்க இருக்கிறார்கள் . விதிமுறைப்படி தகுதியான நபருக்கு பணியிட மாறுதல் கிடைக்கணும். பணம் கொடுத்து பணியிட மாறுதல் வாங்குபவர்கள் அதை சரிக்கட்ட பெரிய அளவில் சிறைத்துறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கி சிறை நிர்வாகத்தை கெடுத்து விடுவார்கள் என்று ஆதங்கப்படும் சிறைப்பணியாளர்கள் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். போல் ஆபாஸ் குமார் ஐ.பி.எஸ். இருப்பாரா ? என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

‘13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
13 IPS officers transferred TN govt action

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யாக உள்ள தேன்மொழி, தமிழக போலீஸ் அகாடமிக்கு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வில் திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பதவி உயர்வில் கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா பதவி உயர்வில் திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி பதவி உயர்வில் மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வி. அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராகவும், எஸ். வனிதா மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி. ரமேஷ்பாபு நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், எஸ்.எஸ். மகேஸ்வரன் சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராகவும், மதுரை நகர் துணை ஆணையர் பாலாஜி காவலர் நலத்துறையின் ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்.பி. ஆதி வீரபாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மதுரை, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Madurai, Sivagangai Police S.P. Transferred!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.