Skip to main content

பிடிச்சா ரிவார்டு... ஆச்சரியபடுத்திய எஸ்.பி...!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

  " முன்பெல்லாம் எப்பொழுதாவது ஒரு முறை தான் ஓபன் மைக்கில் வந்து எங்களை அலறவிடுவாங்க.!! அதனால் சோர்ந்திருப்போம். ஆனால், இப்ப புதுசா வந்த எஸ்.பி.யோ இந்த நேரத்தில் தான் மைக்கில் வருவார் என கணிக்கமுடியாது.. எப்ப வேண்டுமானாலும் மைக்கில் வந்து எங்களை வேலை வாங்குகிறார்.! அதிலும் ஒரு சந்தோஷம்... வேலையை ஒழுங்கா முடிச்சோம்னா எங்களுக்கு அப்பப்ப ரிவார்டு கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்." என எஸ்.பி.புராணம் பாடுகின்றார் சிவகங்கை மாவட்டப் போலீசார்.

 

i

 

தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு மேலாக சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருந்து இடமாற்றலான ஜெயச்சந்திரனுக்குப் பதில் புதிய எஸ்.பி.யாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவர் நேரடி ஐ.பி.எஸ்.அதிகாரியான ரோகித் நாதன். இந்த எஸ்.பி.யால் தான் மாவட்டத்தின் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையான மணல் கடத்தல், போலி மதுவிற்பனை மற்றும் லாட்டரி விற்பனை ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், " மாவட்டத்தில் மணல் திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த எந்த பிரச்சனையும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரப்படும். "இ" பீட் திட்டமும் கொண்டுவரப்படும்." என பொறுப்பேற்ற நாளில் மக்களின் எண்ணவோட்டத்திற்கு பதிலளித்தார் எஸ்.பி. பேச்சோடு இல்லாமல், " லாட்டரி, மணல் மற்றும் போலி மது இதனை பிடிப்பவர்களுக்கு உடனடியாக ரிவார்டு உண்டு." ஓபன் மைக்கில் அறிவிக்க அதிகளவு ரெஸ்பான்ஸ் மாவட்டப் போலீசாரிடமிருந்து.!

 

s

   

அடியில் மணலை நிரப்பி, அது தெரியாத வண்ணம் மரக்கட்டைகளைப் போட்டு மணல் திருட்டில் ஈடுப்பட்ட வாகனங்களை செட்டிநாட்டுப் போலீசார் கைப்பற்ற, காரைக்குடி வடக்குக் காவல் நிலையப் போலீசாரோ பிளாக்கில் விற்கப்படும் மதுப்பாட்டில்களைக் கைப்பற்றி எஸ்.பி.யின் பாராட்டு பரிசிற்காக காத்திருக்கின்றனர்.

 

இது ஒருபுறமிருக்க, " குறிப்பிட்ட வழக்கினைக் கொடுத்து எவ்வளவு நேரத்தில் அந்த வழக்கிற்கு தவறில்லாமல் எப்.ஐ.ஆர்.போடப்படுகின்றது.? என்பதனையறிய காவல் நிலையங்களிடையேப் போட்டி வைக்க, காளையார்கோவில் காவல் நிலையம் முதலிடத்தினையும், காரைக்குடி வடக்கு காவல் நிலையம் இரண்டாமிடத்தையும், மானாமதுரை, திருப்புவனம் மற்றும் திருப்புத்தூர் காவல் நிலையங்கள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாமிடங்களைப் பிடித்து எஸ்.பி.யின் பரிசிற்காக காத்திருக்கின்றனர். மூன்று வருடங்களாகவே சோர்ந்து அமைதியாயிருந்த காவல்துறையினரை உத்வேகப்படுத்தி வேலை வாங்கும் எஸ்.பி.ரோகித் நாதனிற்கு காவல்துறையினர் தரப்பு மட்டுமில்லாமல் பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது. இந்த கடமையுணர்ச்சியை இறுதிவரை எஸ்.பி. பின்பற்ற வேண்டுமென்பது பொதுமக்களின் வேண்டுகோளும் கூட..!!
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
13 IPS officers transferred TN govt action

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யாக உள்ள தேன்மொழி, தமிழக போலீஸ் அகாடமிக்கு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வில் திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பதவி உயர்வில் கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா பதவி உயர்வில் திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி பதவி உயர்வில் மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வி. அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராகவும், எஸ். வனிதா மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி. ரமேஷ்பாபு நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், எஸ்.எஸ். மகேஸ்வரன் சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராகவும், மதுரை நகர் துணை ஆணையர் பாலாஜி காவலர் நலத்துறையின் ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்.பி. ஆதி வீரபாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மதுரை, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Madurai, Sivagangai Police S.P. Transferred!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.