Advertisment

ஐபிஎல் டிக்கெட்; நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்

ipl

ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டுகளை வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதல் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

Advertisment

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னையில் நடக்கும் என்ற நிலையில் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை ஆகிறது. இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை துவங்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதையடுத்து நேற்றுநள்ளிரவு ஒரு மணி முதல் ஏராளமான ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் அண்மையில் புனரமைக்கப்பட்ட பிறகுமொத்தம் 38 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரடியாகபோட்டிகளைக் காண முடியும் என்ற நிலையில், 22,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகஅங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Chennai Chepauk IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe