Skip to main content

“மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர் அமைச்சர் ஐ. பெரியசாமி” - அமைச்சர் கே.என். நேரு 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

I.Periyaswamy worked tirelessly for the welfare of the people says Minister K.N. Nehru

 

ஆத்தூர் தொகுதி மக்கள் நலனுக்காக 34 வருடங்களாக அயராது உழைப்பவர் அமைச்சர் ஐ. பெரியசாமி என்று கன்னிவாடியில் நடைபெற்ற புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.1584.17 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.5.90 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  மேலும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.5.90 கோடி மதிப்பில் புதிய நவீன பேருந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, வரவேற்புரையாற்றினார்.

 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா,  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என். நேரு  திறந்து வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து சித்தையன்கோட்டை மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சிகளில் ரூ.53.55 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு பேசிய அமைச்சர் கே.என். நேரு, “தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் கன்னிவாடி பேரூராட்சியில் 5 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. தொகுதியின் அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி தமிழகம் முழுவதும் சென்றாலும் தனது தொகுதியான ஆத்தூர் தொகுதியின் மீது தனி பாசம் கொண்டவர். கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு அரசு கலைக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார்.

 

இப்போது புதிய பேருந்து நிலையத்தையும் கொண்டு வந்துள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் 2023 இன்றுவரை 34 ஆண்டுகள் தொகுதி மாறாமல் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொகுதியில் மக்களோடு மக்களாக வளம் வருபவர். உங்கள் எல்லோராலும் ஐ.பி. என அன்போடு அழைக்கப்படும் ஐ.பெரியசாமி. நான் கூட ஆரம்பத்தில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு இப்போது திருச்சி தொகுதியில் மாறியுள்ளேன். ஆனால் நீங்கள் அவர் மீது அதிக அளவு பாசத்துடன் இருப்பதால்தான் ஐ.பெரியசாமி தொடர்ந்து ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்” என்றார்.

 

இதையடுத்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் ஆண்களுக்கான மேல்நிலைப்பள்ளி இடமாக இருக்கட்டும், பெண்களுக்கான உயர்நிலைப்பள்ளி இடமாக இருக்கட்டும் தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கும் இடம் கொடுத்து உதவிய திருமலைசாமி ரெட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னிவாடி பேரூராட்சியில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தோணிமலைக்கு முதன்முதலாக தார்சாலை வசதி அமைத்து கொடுத்தது திமுக ஆட்சியில்தான். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாரி வழங்கும் வள்ளலாக கேட்டவுடன் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு 213 கோடி ஒதுக்கீடு செய்து விரிவான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளோம்.

 

திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இரண்டாண்டுக்குள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு 213 கோடி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்களில் தனிநபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அது விரைவில் நிறைவேறப் போகிறது. இதுபோல ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்திற்கு தினசரி 35லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 மாதங்களுக்குள் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளுக்கும் குடிதண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.