Advertisment

மது அருந்த அழைப்பு; கல்லூரி மாணவி கொடுத்த புகாரில் பேராசிரியர் கைது

nn

கல்லூரி மாணவியை மது அருந்து அழைத்ததாக பேராசிரியர் இருவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் 'சேவியர்ஸ் காலேஜ்' என்றும் தன்னாட்சி கல்லூரியில் பல்வேறு துறை சார்ந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் இருவர்தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மாணவி ஒருவரை மது அருந்த அழைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆபாசமாக பேசியதாகவும் தகவல் வெளியானது.

Advertisment

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேரடியாக பாளையங்கோட்டை போலீசார் மற்றும் உளவுத்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பால்ராஜ் மற்றும் செபஸ்டின் மீது பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செபஸ்டின் என்ற பேராசிரியர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த புகாரை தொடர்ந்துகல்லூரி நிர்வாகமும் இரண்டு பேராசிரியர்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe