ADVERTISEMENT

லண்டன்,சிங்கப்பூர் மருத்துவர்கள் மற்றும் ஓபிஎஸ்சை விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு?

09:30 PM Sep 12, 2018 | kalaimohan

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பல்வேறு விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களை காணொளி மூலம் அக்டோபர் முதல் வாரத்தில் விசாரிக்க இருப்பதாக ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ்சையும் அக்டோபர் முதல் வாரத்தில் விசாரிக்க ஆணையம் முடிவெடுத்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் அனைத்து தரப்பு விசாரணையையும் வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து முழு அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT