நெல் கொள்முதலுக்கு இணைய தள சேவை அறிமுகம்!

Introducing web site service for paddy procurement!

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணைய தள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணைய தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம். www.tncsc.tn.gov.in, tncsc-edpc.in என்ற இணைய தளத்திற்கு சென்று நெல் கொள்முதல் தேதியை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெறப்பட்டு விவசாயிகள் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement paddy tn govt
இதையும் படியுங்கள்
Subscribe