Skip to main content

மினி பேருந்தில் அரிவாளைக் காட்டி மிரட்டல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

 Intimidation by showing a scythe in a mini bus ... CCTV footage released shocking!

 

மினி பேருந்து ஓட்டுநரை இளைஞர் ஒருவர் அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் கும்பகோணத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அதில் ஏறிய இளைஞர் ஒருவர் பேருந்தை வழியில் நிறுத்த சொல்லி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தத்தால் பேருந்தின் ஸ்டியரிங்கை வளைத்து சாவியைப் பறித்துக்கொண்டார். அதன்பின் நண்பர்களை வரவைத்த அந்த இளைஞர் பயணிகள் மத்தியில் அரிவாளை எடுத்து பேருந்தின் நடத்துநரைத் தாக்க முற்பட்டார். இதனால் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த காட்சிகள் அந்த மினி பேருந்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்