கரூரில் உள்ள ஜெய்ராம் கலை & அறிவியல் கல்லூரியில் நேற்று (02/01/2022) காலை 11.00 மணிக்கு அரசியல் களப்பணியாற்றுவதற்கான பயிற்சி பட்டறைத் துவக்க விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சசிகாந்த் செந்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டேட்டா பகுப்பாய்வு பிரிவு சேர்மன் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த இன்டர்ன்ஷிப் எனது நெடுங்காலக் கனவு. ஆனால் இதை இவ்வளவு சிறப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது ஒரு கூட்டு முயற்சி. இன்றைய சிறப்பான துவக்கம் இந்த கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.