தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் இணையதள சேவை

in

தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின்னர் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீரடைந்து வருகிறது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க போதிய எண்ணிக்கையில் போலீசார் உள்ளனர். முழு இயல்பு நிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

internet midnight service Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe