Skip to main content

தமிழகத்தில் சர்வதேச யோகா தினம்! (படங்கள்)

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

 

இன்று(21.06.2021) ஏழாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை அரசு யோகா மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் யோகாசனம் செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த யோகா மஹோத்சவம்

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Yoga Festival at Meenakshi Institute of Higher Education and Research, Chennai

 

இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு 100 நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு நேற்று யோகா நிகழ்வு நடைபெற்றது.

 

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும்  மத்திய அரசு இணைந்து 2022 யோகா மஹோத்சவத்தினை உலகெங்கும் நடத்திவருகின்றன. உலக யோகா தினத்தை முன்னிட்டு 100 நாட்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் யோகா ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் யோகாவைப் பெருமைப்படுத்துகின்றனர். பொதுமக்களிடையே யோகாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த இதற்காக உலகெங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.

 

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா 28-04-2022 அன்று நடைபெற்றது. அதில் பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளம் வாயிலாகக் கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலைசிறந்த யோகிகளால் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 

 

Next Story

"இந்தியாவின் மற்றொரு முக்கிய நடவடிக்கை" - செயலியை அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

narendra modi

 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பல மத்திய அமைச்சர்கள் இன்று (21.06.2021) யோகாவில் ஈடுபட்டனர்.

 

இந்தநிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, இன்று யோகா தின சிறப்புரையாற்றினார். அப்போது எம்-யோகா என்ற செயலியையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ''நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசியவை வருமாறு:

 

இன்று முழு உலகமும் கரோனாவிற்கெதிராக எதிராகப் போராடும்போது யோகா நம்பிக்கையின் ஒளிக்கதிராக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவிலோ அல்லது உலகிலோ எந்தவொரு பொது நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. ஆனாலும் யோகா மீதான பேரார்வம் குறையவில்லை. இந்த சர்வதேச யோகா தினத்தில் 'ஆரோக்கியத்திற்கான யோகா’ என்ற உள்ளடக்கம், யோகா செய்ய மக்களை இன்னும் அதிகமாக ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு நாடும், பிராந்தியமும், மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். 

 

இன்று மருத்துவ விஞ்ஞானம் கூட மருத்துவ சிகிச்சையைத் தவிர, குணப்படுத்தும் செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. குணப்படுத்தும் பணிக்கு யோகா உதவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் யோகாவைக் கவசமாகப் பயன்படுத்தினர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யோகா கற்பிக்கும், சுவாச பயிற்சிகளைக் கற்பிக்கும் படங்கள் நிறைய இருகின்றன. இந்தப் பயிற்சிகள் சுவாச அமைப்பை பலப்படுத்துகின்றன என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, இந்தியா மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது எம்-யோகா செயலி வெளியிடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ளவர்களுக்காக வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் கொண்டிருக்கும். இது 'ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்' என்ற நமது குறிக்கோளுக்கு உதவும்.”

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.