Skip to main content

"பெண்ணுக்கு எதிரி பெண் என்ற கருத்தை மாற்றியமைக்க வேண்டும்" மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கருத்து!  

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் காவல்துறை சார்பில் காவலர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்களுக்காக மகளிர் தின விழா நடைபெற்றது. 
 

துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

international womens day celebration in cuddalore

அவர் பேசுகையில், "மகளிர் தினத்தை கொண்டாடும் நாம் பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மேலும் பெண்ணுக்கு எதிரி பெண் என்ற கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது அவர்களை கனிவுடன் அணுகி, குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பயத்தை போக்கி பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றால் பெண் காவலர்களின் பெருமை மேன்மை அடையும்" என்றார்.

international womens day celebration in cuddalore

டி.எஸ்.பி சாந்தி பேசும்போது, "காவல்துறையில் நாம் பணியாற்றுவதில் பெருமை கொள்வோம். தற்போது  காவல்துறையில் மகளிரின் பணி சிறப்பாக உள்ளது. மகளிர் காவலர்கள் எதற்கும் அச்சமின்றி பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் கண்ணீரை போக்கும் நாம் நமது கண்ணில் எக்காரணத்தை கொண்டும் கண்ணீர் வரவைக்க கூடாது. மன தைரியத்தை இழக்க கூடாது" என்றார். இவ்விழாவில் காவல் ஆய்வாளர்கள் ஈஸ்வரி, சரஸ்வதி, எழிலரசி மற்றும் உதவி ஆய்வாளர்கள், மகளிர் காவலர்கள் பங்கேற்றனர்.

international womens day celebration in cuddalore

விழாவில் பெண் காவல்துறையினர் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொண்டும், பாடல்கள் பாடியும், செல்போன் மூலம் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். விழாவில் பங்கு பெற்ற அனைத்து பெண் காவல் துறையினர்க்கும் நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் பலுனை வானத்தில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.