Advertisment

சாலை பாதுகாப்பிற்காக ரோட்டில் இறங்கிய மாற்றுத்திறனாளி மனங்கள்..! (படங்கள்)

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளை புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொடுப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARATDAC) சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். மாற்றுத்திறனாளிகளின் இந்த சமூக அக்கறை பார்ப்போர் அனைவரையும் நெகிழச்செய்தது.

Advertisment

Chennai disability
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe