கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சர்வதேச கள்ளநோட்டு கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தது காவல்துறை. அந்த கும்பல் வைத்திருந்த ரூபாய் 200, 500 நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தன. மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 77,000 மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தன. இவர்களுக்கு சர்வதேச அளவில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisment

 International counterfeit rupees gang arrested in kanyakumari police

கேரளாவை சேர்ந்த சவுத் என்பவர் கள்ளநோட்டை மாற்ற முயன்றபோது காவல்துறையிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.