ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை தடைவிதிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளார்.
ஆன்லைனில் விற்பனையாகும் மருந்துகளில் காலாவதி மற்றும் போலி மருந்துகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டு இல்லாமல் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது என கூறி தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தொடுத்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த இடைக்காலத் தடை உத்தரவை விதித்துள்ளார்.
Show comments