Skip to main content

நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள்... துணைபோகும் அதிகாரிகள்!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

கரோனா தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளநிலையில், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு அல்லாடும் மக்கள் ஒருபுறம் இருக்க, விவசாயத்தில் விளைந்த பொருட்களை விற்பதற்கு விவசாயிகள் படும்பாடு சொல்லில் அடங்காது.


கரோனா பாதிப்புகள் முடிந்தாலும் அடுத்து உணவு தட்டுபாடு, பஞ்சம், பசி போன்ற உணவு பொருட்கள் பற்றாக்குறை, கடுமையான விலையேற்றம் போன்ற சவால்களும் நமக்காக காத்திருக்கிறது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு பெருமுதலாளிகளின் முதலீடுகளுடன், கைகூலியாக பல இடைத்தரகர்கள் விவசாயிகளின் உழைப்பை மலிவாக சுரண்ட களத்தில் குதித்துள்ளனர்.

 

 Intermediaries in Paddy Purchasing ...


தென்மாநில மக்களின் பிரதான உணவான அரிசி தேவையை பதுக்கும் நோக்கில், அதிகாரிகளின் துணையுடன் நெல் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல் கொள்முதல் செய்து, பதுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அரிதாஸ் "புரோக்கர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றவே, கடந்த ஆண்டு முதல் அரசே நேரடி கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டுவரை நல்லமுறையில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் இந்த முறை கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தேவையை பயன்படுத்தி, விவசாயிகளின் வயிற்றில் அடித்து நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்க புரோக்கர்கள், அதிகாரிகளின் துணையுடன் செயல்பட்டுவருகிறார்கள்.
 

 nakkheeran app



இவரைத் தொடர்ந்து விவசாயி நந்தகோபால் "எங்கள் கிராமத்தில் சுமார் இருநூறு ஏக்கர் ஏரிநீர் பாசனத்தை ஆதாரமாக கொண்டு இரண்டு போகம் நெல் சாகுபடி நடக்கும், மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்த்தால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி ஆகும். நெல்கொள்முதலை கடந்த பத்து ஆண்டுகளாக அரசு இங்கு நடத்திவந்தது. சுமார் இருபதாயிரம் மூட்டை நெல் அரசு கொள்முதல் செய்யும். அதேபோல இந்த முறையும் நெல் அறுவடைக்கு தயார் ஆனநிலையில் வழக்கம் போல மாவட்ட ஆட்சியரிடம் கொள்முதல் செய்ய மனுகொடுக்க சென்றபோது, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை வேலை உள்ளதால் மாவட்ட ஆட்சியர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

 

 Intermediaries in Paddy Purchasing ...


நீண்ட போராட்டத்திற்கு பின் எங்களை சந்தித்த, நெல் கொள்முதல் மண்டல மேலாளர் செந்தில், இந்தமுறை நெல் கொள்முதல் எல்லாம் கிடையாது. இந்த வருடம் டார்கெட்டெல்லாம் முடிந்துவிட்டது என்றும், இப்போ அதற்கெல்லாம் நேரமில்லை என்றார். இதே மாவட்டத்தில் மற்ற இடத்தில் எல்லாம் வழக்கம்போல நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்று கேட்டதற்கு, தேவையென்றால் நெல் மூட்டைகளை அந்த மையத்திற்கு கொண்டுவந்தால் வேண்டுமென்றால் பார்க்கலாம் என்று எங்களை புறக்கணித்தார். 

அவர் கூறுவது போல இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்முதல் மையத்துக்கு நெல் மூட்டைகளை எடுத்து செல்லும் செலவு கூடுதலாக ஆகும். மேலும் அந்த ஊரில் நெல் மூட்டைகள் நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கொள்முதல் செய்தால் அவர்கள் மூட்டையை கொள்முதல் செய்யவே இருபது நாட்களுக்கு மேல் ஆகும். அதற்குள் எங்களது சுமார் இருபதாயிம் மூட்டை நெல் கெட்டுவிடும், மேலும் அந்த ஊர்ல நெல் மூட்டைக்கு காவல் காக்கனும், இதுபோல பல நடைமுறை சிக்கல்களும் உள்ளது. தாய் வயிற்றில் வளரும் கருவை போல இரவு பகலாக கஷ்டப்பட்டு பாதுகாத்து பிரசவ வேலை போன்ற அறுவடையின் போது நிறைமாத கர்ப்பிணியை புறக்கணிப்பபது போல எங்களை புறக்கணித்துவிட்டனர்.  வேளாண்மை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியரை காணமுடியவில்லை.

 

 Intermediaries in Paddy Purchasing ...


இவரைத் தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த விவசாயி சுரேஷ் "எங்க பகுதி விவசாயிங்க அறுவடை தொடர்பா கலெக்டரை பாக்குறதுக்கு போன அதவேளை எங்க பகுதிக்கு வந்த சில புரோக்கருங்க "எல்லாரும் கரோனா வேலையில இருக்காங்க, நெல்லு அறுவடைக்கு வந்துடுச்சு அரசாங்கத்தை நம்பினா வீணாகதான் போகும், பேசாம நாங்க கேட்கிற விலைக்கு குடுங்கனு மிரட்டல் தோனில பேசிட்டு போறாங்க. நாங்கெல்லாம் பணகஷ்டத்துல இருக்கிறத தெரிஞ்கிட்டு, அதுக்கு பின்னாடி தொடர்ச்சியா வந்த புரோக்கர்கள் நெல் மூட்டைகளை பாதி விலைக்கு கேட்டு டார்ச்சர் செய்யுறாங்க. வேளாண்மை அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ எந்த நடவடிக்கையயும் எடுக்கவில்லை'' என புலம்பினார். இவரைத் தொடர்ந்து விவசாயி சீனிவாசன் "பொதுவா 80 கிலோ எடை உள்ள நெல் மூட்டை ரூ1400 முதல் 1500, 1600 ரூபாய்க்கு விலை போகும், நெல் மூட்டைய, 900 ரூபாய்க்கு விலைக்கு கேக்குறாங்க'' என்று புலம்பினார், அதே ஊரை சேர்ந்த கோபிநாத்தோ ஊர்ல நெல்லு காயப் போட நல்ல இடமில்லை, உடனடியாக ஆட்சியாளர்கள் தலையிட்டு இந்தியாவின் முதுகெலும்மை பாதூகாக்க வேண்டும் என்றார்.

மேலும் நம்மிடம் பேசிய விவசாய சங்கத்தை சேர்ந்த நேரு "விவசாயிகள் பிரச்சனைகள் ஒன்றா, ரெண்டா, விவசாயிகள் உரிமைக்காக தொடர்ந்து போராடினாலும் பலன் இல்லை, முற்றிலும் விவசாயத்தை ஒதுக்கிவிட்டால் நாம் உணவுக்காக அண்டைநாட்டிடம் தான் கையேந்த வேண்டும் என்பதை நினைவுகொள்வோம். சமீபத்தில் பெய்த கனமழையால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து வீணாக போனது, தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யுமிடத்தில் தற்போது கொள்முதல் மையம் அமைக்க அரசு அதிகாரிகள் மௌனம் கலைய வேண்டும்.

இந்த ஒட்டுமொத்த புகார்கள் தொடர்பாக காஞ்சிபுரம் நெல் கொள்முதல் மண்டல மேலாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம் "முறையான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டிருந்தால், பர்மிஷ்சன் தருவாங்க. எல்லாம் கலெக்டர் ஆபீஸ்ல தான் கேட்கனும்'' என்று படபடப்புடன் தொடர்பை துண்டித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் பேசினோம், அவர் "கரோனா தொற்று கட்டுப்படுத்தும் வேலையில் உள்ளதால் இந்த விபரம் என் பார்வைக்கு வரவில்லை. பரவாயில்லை உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியளித்தார்.

எப்படியோ ஒவ்வொரு விவசாயிகளும் சேற்றில் இறங்கினால் தான் நமக்கெல்லாம் வீட்டில் சோறு கிடைக்கும் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

'மீண்டும் வேகமெடுக்கும் பரந்தூர் போராட்டம்'- போலீசார் குவிப்பால் பரபரப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Paranthoor struggle to pick up speed again'-Police build up excitement

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக் குழுவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னைக்கான இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்ட அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அலுவலகம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலம் எடுக்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர்களில் படையெடுக்க ஆயத்தமான நிலையில், திடீரென சிலர் சாலையிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.